Pages

Friday 25 February 2011

பால் புட்டியில்

குழந்தைகளின்  பால் புட்டியில் பாலை ஊற்றி விட்டு இறுக்க அடைத்து குழந்தைக்கு கொடுக்க கூடாது..எந்தளவுக்கு இறுக்குகிறோமோ அந்தளவுக்கு குழந்தை உரிஞ்சி குடிக்க கஷ்டப்படும் அது  சம்ம்ந்தமாக சுவாசப்பரச்சனைகள் வரும் என்கிறார்கள்.
  சும்மா லேசாக ஒரு திருப்போடு மூடினால் போதுமானது

Wednesday 23 February 2011

உடம்பு குறைய

 எனக்கு தெரிஞ்சதை சொல்ல போகிறேன்.வெற்றிகரமாக எடையை குறைத்துக் கொண்டிருக்கிறேன்....எப்படி எப்படி எப்படி என்று கேட்பவர்களுக்காக இதோ சில டிப்ஸ்

1)நேரா நேரத்திற்கு உணவை சாப்பிட வேண்டும்.
2)காலை உணவை விரும்பியதெல்லாமாகாவும் அதிகமாகவும் கூட சாப்பிடலாம்..மதியத்திற்கு ஒரு அளவாக சாப்பிடவும்.இரவில் ரொம்ப கம்மியாக சாப்பிடவும்..இரவு கூடுமானவரை நான் வெஜ் தவிர்க்கவும்..அப்படியே எப்பவாவது பார்ட்டி அது இது என்றால் சாப்பிட்ட பின் 2 மணிநேரம் கழித்து கொஞ்சம் நடையோ உடற்பயிற்ச்சியோ செய்து விட்டு தூங்க போகலாம்
3)தண்ணீர் நிறையளவில் குடிக்க வேண்டும்..இப்படி பழக்கமில்லாதவர்கள் முதல் சில நாள் கஷ்டப்பட்டு அலாரம் வைத்தாவது குடிக்கலாம்..ஒரே வாரத்தில் தாகம் அந்தளவுக்கு வந்திருக்கும்..பிறகு நம்மையறியாமல் தண்ணீர் உள்ளே போகும்
4)ஒரு போதும் முழுக்க முழுக்க டயட் கன்ட்ரோல் என்று எதையுமே தொடாமல் இருக்க கூடாது..இது ஒரு வித வெறுப்பை உண்டாக்கும்..விரும்பியதை ஒன்றிரண்டு ஸ்பூன் வைத்து தினமும் சாப்பிடலாம்
5)ஐஸ் க்ரீம் ,சாக்கலேட் போன்றவற்றை தவிர்க்கவோ வாரம் ஒருமுறை சாப்பிடவோ செய்யலாம்
6)தினம் இரவு 1 கப் தண்ணீரில் 1 ஸ்பூன் பட்டை பொடியை கொதிக்க வைத்து சூடாறியதும் தேன் கலந்து இரவு படுக்கும் முன் 1/2 கப்பும் மீதத்தை காலை எழுந்ததும் வெறும் வயிற்றிலும் குடிக்கவும்..இது உடல் வேகமாக இளைக்க உதவும்
7)உடம்பு குறைக்க போகிறேன் என்று நாலு பேரிடம் சொல்லி வைக்கவும்..இதனால் அவர்களை அடுத்த முறை பார்க்கையில் குறைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்
8)ட்ரெஸ்ஸை 1 இன்ச் அதிகமாக கூடி தைக்க சொல்லாமல் சரியான அளவுக்கு கொடுக்கவும்
9)உடம்பு முதல் சில மாதங்களுக்கு தான் குறைக்க கஷ்டம் கொஞ்சம் குறைக்க தொடங்கிவிட்டால் பிறகு பழைபடி ரொம்பவும் கடுமையான உடற்பயிற்ச்சி கூட வேண்டாம் தாமாக உடம்பு குறையும்
10)இரவில் என்றுமே லைட்டாக உணவாக சாப்பிடவும்.காலையிலும் கூடுமானவரை ஓட்ஸ் ,சத்து மாவு,கார்ன் ஃப்லேக்ஸ் இது போல் சாப்பிடவும்..மதியம் மட்டும் 1 கப் சாதமும் மீதம் விதவிதமாக பொரியலோ குழம்போ சேர்த்து சாப்பிடலாம்..மீன் தாராளமாக சாப்பிடலாம்..சிக்கன் வாரம் ஒரு முறையும் சாப்பிடலாம்..மட்டனை கூடுமானவரை குறைப்பது நல்லது

11)குழந்தைகளை வைத்துக் கொண்டு செய்ய முடியவில்லையே என்று வருத்தம்  வேண்டாம்.அவர்களோடு எண்ணி,பாடிக் கொண்டே ஸ்கிப்பிங் செய்வதும் படுத்துக் கொண்டு முட்டியில் அவர்களை வைத்து முட்டியை மடக்கி மடக்கி தூக்கி விளையாடுவது அவரகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.உடம்பும் மெலியும்
12)துணி கைய்யால் துவைப்பது,தரை துடைப்பது நல்ல எக்செர்சைஸ்..
13)மூச்சுப் பயிற்ச்சி சிறந்த ஒன்று.அதற்கு முறையாக பயிலவோ சில தளங்களை பார்த்து கற்றுக் கொள்ளவோ செய்யலாம்
14)பகலில் தூங்குவது நல்லது தான் ஆனால் வெறும் 30 நிமிடம் தான்..மனிக்கணக்கில் தூங்குவதை தவிர்க்கவும்
15)கூடுமானவரை சும்மா இருக்காமல் எதாவது வேலையில் ஈடுபடவும்..முக்கியமாக டிவி பார்ப்பதை குறைக்கவும்..மெகா சீரியால் பார்ப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும்
16நேரத்துக்கு தூங்க போய் நேரத்துக்கு எழுந்து பழகவும்

Friday 18 February 2011

மனநோய்

 பிரசவத்திற்கு பின் வரும் டிப்ரெஸ்ஷன் கேள்விப்பட்டிருக்கிறேன்.சொந்தங்களில் பார்த்ததும் உண்டு..ஆனால் இவ்வளவு பயப்பட வேண்டிய விஷயம் என்று நினைக்கவே இல்லை.
  நேற்று எங்களுக்கு தெரிந்த உறவுக்கார பெண் பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்டது..முழுக்க முழுக்க டிப்ரெஷன் மட்டுமே காரணம் வேறெந்த ப்ரச்சனையும் இல்லாத சந்தோஷமான குடும்பம்
   குழந்தை பிறந்ததிலிருந்து வழக்கத்துக்கு மாறாக அதிக ஆத்திரம் கொள்வதும், அழுவதுமாக இருந்தது ..ஆனால் எந்த நேரத்தில் அதற்கு அப்படி தோன்றியதோ ஆள் இல்லாது போன நேரம் இப்படி செய்து விட்டது.
  இது நமக்கு அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்,.நமது சொந்தபந்தத்தில் இப்படி யாருக்கேனும் இருந்தால் நிச்சயமாக நல்ல மனநலமருத்துவரிடம் காட்டி தக்க சிகிச்சை பெற வேண்டும்
  இப்படிப்பட்ட நேரத்தில் புகுந்த வீடு பழைய வீடு என சடங்கு சம்பிரதாயம் பார்க்காமல் நல்லபடியாக சிகிச்சை செய்து பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்
  இப்படிப்பட்டவர்கள் பிரசவமான பின் அதிக ஆத்திரம் கொள்வது,அழுவது,குழந்தையை கவனிக்காமல் இருப்பது,அல்லது குழந்தையை பற்றி அதிக பயம் கொள்வது,அனைவரிடமிருந்தும் ஒழுங்கி பேசாமல் இருப்பது,சம்மந்தமில்லாததை பேசுவது,இடம் பொருள் தெரியாமல் பேசுவது,தன்னம்பிக்கை இழந்தும் ஷக்தி இழந்தும் சோர்வாக காணப்படுவது,எதையோ பரிகொடுத்தது போல் சோகமாகவே இருப்பது,அவ்வப்போது காரணமில்லாமல் அழுவது,தூக்கமில்லாமல் தவிப்பது,சாப்பிட மறுப்பது,குழந்தையை அடிக்கவோ காயப்படுத்தவோ முயற்சிப்பது  போன்ற அறுகுறிகளை காட்டுவார்கள்..
 அதனால் இப்படிப்பட்ட எதுவேனும் தோன்றினால் அதனை மருத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும்.
  எனினும் சாதாரண்மாகவே சிலருக்கு கோபமும் அழுகையும் இந்த சமயத்தில் அதிகமாக காணப்படலாம்.நாள் செல்ல செல்ல இம்மாதிரி அறிகுறிகள் கூடிக் கொண்டே வந்தால் நிச்சயமாக நல்ல மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டியது அவசியம்

Tuesday 15 February 2011

உணவு

நம்முடைய உணவு பழக்க வழக்கம் என்பது ரொம்ப ரொம்ப முக்கியமான ஒன்று..உணவு உறக்கம் சரியாக இருந்தால் பல பல நோயின் பிடியிலிருந்து தப்பலாம்.
  குறிப்பாக வயிறு சம்மந்தமான ப்ரச்சனைகள் பெரும்பாலும் தவறான உணவு பழக்கங்களால் வரும் வாய்ப்பு அதிகம்.
  அதனால் சிறு குழந்தைகள் முதலே உணவு விஷயங்களில் கவனமாக ஸ்ட்ரிக்டாக கடை பிடிக்க வேண்டும்..இந்த பதிவை எழுத தோன்றியதே இங்கு வெளிநாட்டு வாழ்க்கையில் அக்கம் பக்கத்து வீடுகளிலும் நாம் காணும் உணவு பழக்கவழக்கம் தான்.

இதில் ரொம்ப முக்கியமான ஒன்று காலை உணவு,,காலை உணவினை எக்க்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது.இது பெரியவர்களுக்கு மட்டுமல்ல சிறிய குழந்தைகள் முதல் காலை உணவை தவறாமல் ஊட்டி பழக்க வேண்டும் என பிரபல மருத்துவர் சொன்னார்.
  ரொம்பவும் வயிற்றை நிரப்ப வேண்டும் என்றே இல்லை...ஒரு இட்லி அல்லது அரை இட்லியை கூட கொடுத்தாவது காலை உணவை ஊட்டி விட வேண்டுமாம்..குழந்தைகள் மறுத்தாலும் நாம் விடாமல் கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்து பழக்க வேண்டுமாம்...
  இங்கு பெரும்பாலும் குழந்தைகளோ பெரியவர்களோ காலை உணவு என்ற ஒன்றை பற்றி நினைப்பதே இல்லை...அப்படியே பட்டினியாக இருந்து மதியம் எதாவது கண்ட கண்ட திண்பண்டங்கள் அல்லது ஜன்க் ஃபுட் சாப்பிடுவது வழக்கமாக காண முடிகிறது.
  சமீபத்தில் எனக்கு தெரிந்த உற்வினர் பிள்ளைகள் ஒரே சிரித்து கொண்டு கிண்டலடித்து கொண்டிருந்தார்கள் எங்கள் க்லாசில் ஒரு பைய்யன் தினமும் சாதம் கொண்டு வருவான் என்று..இதில் சிரிப்பு என்ன வேண்டி கிடைக்கிறது என்றேன்...நாங்கல்லாம் சேன்ட்விச் மட்டுமே கொண்டு போவோம் அவன் சுத்த பட்டிக்காடு என்றார்கள்..இப்படி கெட்டுகிடக்கிறது காலம்.
  நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அட்டூழியங்களால் உடல் ரொம்பவே கெட்டு போகிறது.இதனால் பின்னாளில் ரொம்பவே வேதனை தரக் கூடிய உடல் உபாதைகள் வந்து சேரும்
  சின்ன குழந்தைகளை ஜன்க் ஃபுட்டுக்கு பழக்கப்படுத்துவது நாமே தான்...ஒரு வயதில் எப்படியும் சாப்பிடுவார்கள் என்று சிறு வயதிலேயே பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் கண்டகண்டதையும் குழந்தைகளுக்கு தருவது நாமே அவர்களது ஆயுளை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதற்கு சமம்.
   இயன்ற அளவு வீட்டில் தயாரித்து உணவுகளை கொடுக்கலாம்..நாம் சப்பிட்டு வளர்ந்த இட்லி,தோசை களை கூட இன்றைய பிள்ளைகளுக்கு ஏற்ற வகையில் அலங்காரப்படுத்தி பரிமாறலாம்.சிறு வயதிலேயே சத்தான உணவின் அருமையை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருந்தால் நிச்சயம் வளரும்போதும் அவர்களுக்கு மனதில் ஆழமாக பதிந்து நிற்கும்.
  அதனால் தாய்மார்களே தினமும் உங்கள் குழந்தைகளுக்கு 1/4 கப் கர்ன்ஃப்லேக்சையாவது நிர்பந்தித்து ஊட்டி விட்டு ஆரோகியமாக குழந்தையை வளர்க்கும் நிம்மதியோடு பள்ளிக்கு அனுப்புங்கள்
 

Sunday 13 February 2011

குழந்தைகள் சாப்பிட மறுத்தால்



நீங்கள் வழக்கமாக கைய்யில் ஊட்டுவதாக இருந்தால் ஸ்பூனில் ஊட்டி பாருங்கள்..ஸ்பூனில் என்றால் கையால் ஊட்டி பாருங்கள்.
இந்த சின்ன மாற்றம் கூட சில குழந்தைகளை சாப்பிட வைக்க உதவும்

பழவகைகள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு பழவகையாக மெல்ல மெல்ல பழக்கலாம்..அதன் மேல் ஒரு விருப்பம் எழ முதலில் கொஞ்சம் இனிப்பு தூவி கொடுக்கலாம்..அதன் மேல் சின்ன சின்ன கலர் கலரான காக்டெயில் ஃப்ரூட் சாலட் ஃபோர்க்குகள் குத்தி கொடுக்கலாம்

Sunday 6 February 2011

பெண்கள் தைக்கும்பொழுது


 பெண்களின் ப்லவுசில் ,சல்வாரில் என எல்லா ட்ரெஸ்ஸிலும் தோள் பக்கமாக ஒரு சின்ன வள்ளியை வைத்துக்  ஓரத்தில் ப்ரெஸ் பட்டன் வைத்துக் கொண்டால் உள்ளாடைகளை அதனுள் வைத்து பட்டன் போட்டு விடலாம்..போட்டது போட்ட இடத்தில் இருக்கும்.

Tuesday 1 February 2011

மானங்கெட்ட மரமண்டைகள்

  சொன்னதையே சொன்னதையே திரும்ப நானும் சொல்கிறேன்..பல தளத்திலும் வெளியாகியிருந்தாலும் மக்களுக்கு அறிவு வருமா என்றால் இல்லவே இல்லை. பிள்ளைகளை வெக்கமில்லாமல் வளர்த்துவதால் பின்னாடி சூடு சொரணை இல்லாமலே இருப்பார்கள்..சின்ன குழந்தைகளாயினும் அடுத்தவர்கள் முன்னிலையில் உடுப்பில்லாமல் திரியக் கூடாது என்று ஸ்ட்ரிக்டாக சொல்லி வைக்க வேண்டும்..சிலர் வீட்டில் யார் இருந்தாலும் சரி ஒன்னுமில்லாமல் குழந்தைகளை திரிய விடுவார்கள்.
   இன்று உஷாராக இருந்தாலே அங்கங்கே மறைவாக கேமராவில் வீடியோ பதிவு செய்வது நடக்கிறது இதில் வெக்கமும் இல்லாமல் ஆபத்தில் சிக்கும் வாய்ப்புகள் ரொம்பவே அதிகம்..குறிப்பாக வெக்கமில்லாத அம்மாக்களை பார்த்து வளரும் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் வாய்புகள் ரொம்பவே அதிகம்.
   சமீபத்தில் ஒரு பிரபல துணிக்கடைக்கு குழந்தைகளுக்கு துணியெடுக்க போயிருந்தேன் அங்கு ஃபிட்டிங் ரூமில் வெளியே ஒரு ஆளை நியமித்திருந்தார்கள்...அந்தம்மா வெளியில் காவல் நின்று கொண்டிருந்தது.நான் மகளின் ட்ரெஸ் போட்டு பார்ப்பதற்காக ஃபிட்டிங் ரூம் போக உள்ளே நுழைந்ததும் சரியான எரிச்சல் வந்தது.அந்த காவல் பெண்ணை தாண்டி உள்ளே போனதும் வரிசையாக பல பல குட்டி உடைமாற்றும் ரூம்கள்..அதில் இரு ரூமில் பெண்கள் கதவை அடைக்காமலேயே வெளியே  நிற்கும் அம்மாக்கள் அத்தைகளுக்கு போட்டு காட்டிக் கொண்டிருந்தார்கள் அங்கு சின்ன பிள்ளைகளும் அம்மாக்களின் இந்த கோலத்தை பார்த்துக் கொண்டிருந்தது .அட்லீஸ்ட் ஒரு கதவையாவது அடைத்து வைக்கலாம்..என் மகள் என்னிடம் "அய்யே "என்று சொல்லி சிரித்தாள்..சின்ன குழந்தைகளுக்கு தெரியும் இந்த வெக்கம் கூட இந்த பெண்களுக்கு இல்லையே என்று நொந்து கொண்டேன்.அதுவும் சமீப காலமாக இவ்வளவு படித்தும் கேட்டுமா இப்படி என்பதை நம்பவே முடியவில்லை.
   வெளியே வந்துவிட்டு அடுத்த துணிகளை பார்த்துக் கொண்டிருக்கையில் தான் மேலும் எனக்கு பயம் கவ்விக் கொண்டது..காவல் பெண் சில நிமிடங்களுக்கு எங்கோ சென்று விட்டது..எனக்கு உள்ளுக்குள் பக் பக் என்று இருந்தது..எதாவது ஆம்பிளைகள் தெரியாமல் கதவை திறந்தால் என்னவாகும் என்று நினைத்தேன்.
   ஆண் டெயிலர்கள் அழகாக தைப்பார்கள் என்று அக்குவேர் ஆணிவேறாக உங்கள் ப்லவுசின் அளவுகளை சொல்லி தைக்ககொடுப்பதை கேட்கவே அசிங்கமாக இருக்கிறது.அம்மாமார்களிடம் சொல்லவே கூச்சப்படும் விஷயங்களை ஒரு டெயிலரிடம் எந்த ஒரு வெக்கமுமில்லாமல் எப்படி இவர்களால் சொல்ல முடிகிறது?
   ஒரு அம்மா டெயிலரிடம் தன் மகளுக்கு பட்டுபாவாடை தைக்க வந்திருந்தார்.சுமார் 8 வயதுடைய குழந்தை அது.பாவாடையின் சட்டைக்கு திறந்த ஜன்னல் கழுத்து வேண்டும் என்றும் நல்ல இறங்கி தைக்கவும் சொன்னார்..நான் எதிர்பார்க்காதபடி டெயிலரே ஏங்க அது இந்த வயசுக்கு நல்லா இருக்காதுங்க..குழந்தைங்க இப்ப அப்படியெல்லாம் போட்டா அசிங்கமாக இருக்கும் என்று சொன்னார்..எனக்கு உள்ளுக்குள் ஒரே சந்தோஷம்.
  என்று தான் திருந்துவோம்?
 பெண்கள் சுடிதார் அணிகையில் தயவு செய்து உள்ளே உள்ளாடை அணியவும்...சேலைக்கு ப்லவுஸ் தைக்கையில் கணமான நிழலடிக்காத துணிகளாக வாங்கவும்...நிச்சயமாக உங்களுடைய உள்ளாடைகள் வெளியே தெரிவது யாரையும் கவருவதில்லை மாறாக ரொம்பவே அசிங்கமாக இருக்கிறது..இருசக்கர வாகனங்களில் சேலை கட்டி பயனிக்கும் பெண்கள் கட்டாயம் உடை சரியாக இருக்கிரதா என்று சரிபார்க்கவும்..கொஞ்சம் இறக்கமாக தைக்கவோ சேலை கொண்டு மறைக்கவோ செய்யலாம்..இல்லையென்றால் பின்னாடி வரும் ஆட்டோக்காரன் மாட்டிவண்டிக்காரன் கூட கேவலமாக தான் பார்ப்பான்