Pages

Tuesday 23 November 2010

பாவம் அம்மா

  தெரிந்தவரது குழந்தை சுடுநீரில் கைய்யை போட்டு விட்டு வெந்துவிட்டது.சரி தப்பு தான் கவனிச்சிருக்கனும் ஆனால் இதெல்லாம் நடந்து முடிந்தபின் என்ன செய்யனும்..இனி இருக்கும் வேலையை பாக்கனும் கவனமாக இருக்கனும்
   அதை விட்டுவிட்டு ஆள் ஆளுக்கு அந்த பெண்ணையே திரும்ப திரும்ப திட்டலாமா...அது பாவம் பல வருஷம் கழிச்சு கிடைத்த குழந்தை நல்ல கவனித்து கொள்வாள் .அன்று சிலின்டர் திடீரென தீர்ந்துவிட்டதென அவசரத்தில் குழந்தையோடு கிச்சனில் போயிருக்கிறாள்.சைடில் குழந்தை கைய்யை போட்டுவிட்டது.
  நானும் எல்லோரும் திட்டுவதை கேட்டுக் கொண்டு தான் இருந்தேன்..செம்ம கடுப்பு.குழந்தைகள் விஷயத்தில் கவனமா இருங்க இப்படி எல்லாருமே அம்மாவுக்கு தான் டோஸ் தருவார்கள்.

0 comments:

Post a Comment