Pages

Tuesday 2 November 2010

குழந்தைகளுக்கு எழுத்து

எழுத்துக்களை கற்றுக் கொள்ளும் சுமார் மூன்று நாலு வயதில் பிள்ளைகளுக்கு பல எழுத்துக்களும் அதுவா இதுவா என்று குழப்பமாக இருக்கும்.ரொம்ப அதுகளை தொந்தரவு செய்யாமல் ஒரு 30 நிமிடம் படிக்க வைத்து விட்டு முக்கியமானவைகளை அல்லது குழப்பும் எழுத்துக்களை சுவற்றில் பெரியதாக எழுதி கலரடித்து ஒட்டிவிடலாம்...அவர்கள் விளையாட்டுக் கிடையில் அவ்வெழுத்துக்களை பார்த்து தானாக சீக்கிரம் மனதில் பதியும்.
   என் வீட்டில் எப்ப்பொழுதுமே சுவற்றில் மகளது பாடங்கள் இருக்கும்.நான் என் மகளுக்கு ஸ்டூடென்ட் போல உக்காந்து கொள்வேன்...அப்பப்ப நல்ல கொட்டு விழுந்தாலும் கூட நான் அதிகம் கஷ்டப்படாமல் அவள் எனக்கு டீச்சராக சொல்லி தந்தே படித்து விடுவாள்.

0 comments:

Post a Comment